Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு


Nayanthara:வாக்கு கொடுத்த விக்னேஷ் சிவன்: இருக்கு, 2வது தேனிலவு இருக்கு


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடந்தது.

இதையடுத்து அவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றார்கள். அங்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நிறைய புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தி சயாம் ஹோட்டலுக்கு நன்றி. இந்த சூழல் மற்றும் அருமையான உணவுக்காகவே திரும்பி வருவோம் என்றார்.

ஹோட்டலுக்கு விக்னேஷ் சிவன் அளித்த வாக்குறுதியை பார்த்தால் இரண்டாவது ஹனிமூன் இருக்கிறது போன்று என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.
Nayanthara: தேனிலவு முடிந்ததுமேவா, இது ரொம்ப ஃபாஸ்ட்டு: ரசிகர்களை அதிர வைத்த நயன்இதற்கிடையே நாடு திரும்பிய கையோடு ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் நயன்தாரா ஜி ஜவானில் நடிக்கிறார் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்தார் ஷாருக்கான்.

ஜவான் படத்தில் தீபிகா படுகோன் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog